Monday, December 21, 2009

இயற்கை

நான் அடிமை உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகாய் படித்ததன் நோக்கம் தான் என்ன...?
செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்
உன்னை அழிக்க வந்த மனிதனையே
நம்பும் நீ ஏமாளியா...?
துரோகியையும் அரவணைக்கும்
நீ புத்திசாலியா...?

அழிந்துவரும் இனங்கள்
தெரியும் நமக்கு
அழிந்து வருவது நீ தான்
என்பது எத்தனை பேருக்கு
தெரியும்
இனங்கள் யாவுமே
உன் சேர்க்கை
என்பதை அறியும்
ஓரிரு மனிதங்கள்
திக்குத் திணறுகின்றன

உன்னைக் காப்போமா என்ற ஏக்கத்துடன்
விடை தேடியும் கிடைக்காது
நீ பதில் சொல்லும் வரை....

Saturday, December 19, 2009

தொடர்பு

பிரிவு
சந்திப்பு முடிவடைய - நீ
எடுத்த முடிவு நம்மை சேர்க்க
நான் மட்டும் பிரிவதென முடிவேடுத்தேனே
உன் நன்மைக்காகவா..........?

சண்டை
சண்டைக்கு தீர்வு காண
சண்டை பிடிக்கின்றன
பல உள்ளங்கள்
வெளியுலகம் அறியாத
இந்த மௌனச் சண்டை
வெளி வராத வரை
விடையேது சண்டைக்கு.........?

மோதல்
மனைகளின் மோதல்
நாவிலே புரள
உருவெடுக்கும் போர்
நாளடைவில் மடுவாகவோ? மாலையாகவோ?

ஏமாற்றம்
எதிர்பாராத சந்திப்பு
எதிர்பாராமலே முடிவடைந்தது
ஏமாற்றம் இது என்றால்
ஏமாளி நீ
காரணத்தை அறிய முற்படுகிறாயா
மனிதனாகிறாய் இவ்வுலகில்....

பி.கு: இந்த கவிதை சீ சீ கிறுக்கல் தொகுப்புக்கு தொடர்பு என்று பெயர் வைத்ததன் காரணம், இந்த பிரிவு, சண்டை, மோதல், ஏமாற்றம் என்ற நான்கிற்கும் தொடர்பு இருப்பதால் தான்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் வருவது
காதலில் வருவது
நட்பில் வருவது
குடும்பத்தில் வருவது
வேட்டிக்கை வருவது
என்று பல இடங்களில் இந்த நன்கு விடயங்களும் தொடர்பு படுகின்றன...........
காதல் விடயத்தில் பலர் எனக்கு எதிரியாக வரலாம் (காதலில் வருவது என்று சொல்லி இருந்தேனே, அதைச் சொன்னேன்..)
அது வேறு ஒன்றுமல்ல......... இங்கு நான் தோல்வி என்றது காதல் தோல்வியில் முடியும் என்பதால் அல்ல; காதலில் ஏற்படும் பல வேளைகளில் தோல்வியில் முடிவடைகின்றன (என் அனுபவம் அல்ல, பார்த்த உண்மை)
இதே போல தான் ஏமாற்றமும் கூட..................
மோதல் கீதல், சண்டை சச்சரவு எல்லாம் இங்க சகஜமப்பா...........