Monday, December 21, 2009

இயற்கை

நான் அடிமை உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகாய் படித்ததன் நோக்கம் தான் என்ன...?
செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்
உன்னை அழிக்க வந்த மனிதனையே
நம்பும் நீ ஏமாளியா...?
துரோகியையும் அரவணைக்கும்
நீ புத்திசாலியா...?

அழிந்துவரும் இனங்கள்
தெரியும் நமக்கு
அழிந்து வருவது நீ தான்
என்பது எத்தனை பேருக்கு
தெரியும்
இனங்கள் யாவுமே
உன் சேர்க்கை
என்பதை அறியும்
ஓரிரு மனிதங்கள்
திக்குத் திணறுகின்றன

உன்னைக் காப்போமா என்ற ஏக்கத்துடன்
விடை தேடியும் கிடைக்காது
நீ பதில் சொல்லும் வரை....

3 comments:

  1. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. மிகவும் அழகாக இருக்கிறது...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. இயற்கையை பாதுகாக்கும் உங்கள் பணி தொடரட்டும் ...அதில் உங்கள் இயற்கையும் உள்ளடங்கட்டும்.....வாழ்த்துக்கள்

    ReplyDelete