Saturday, December 19, 2009

தொடர்பு

பிரிவு
சந்திப்பு முடிவடைய - நீ
எடுத்த முடிவு நம்மை சேர்க்க
நான் மட்டும் பிரிவதென முடிவேடுத்தேனே
உன் நன்மைக்காகவா..........?

சண்டை
சண்டைக்கு தீர்வு காண
சண்டை பிடிக்கின்றன
பல உள்ளங்கள்
வெளியுலகம் அறியாத
இந்த மௌனச் சண்டை
வெளி வராத வரை
விடையேது சண்டைக்கு.........?

மோதல்
மனைகளின் மோதல்
நாவிலே புரள
உருவெடுக்கும் போர்
நாளடைவில் மடுவாகவோ? மாலையாகவோ?

ஏமாற்றம்
எதிர்பாராத சந்திப்பு
எதிர்பாராமலே முடிவடைந்தது
ஏமாற்றம் இது என்றால்
ஏமாளி நீ
காரணத்தை அறிய முற்படுகிறாயா
மனிதனாகிறாய் இவ்வுலகில்....

பி.கு: இந்த கவிதை சீ சீ கிறுக்கல் தொகுப்புக்கு தொடர்பு என்று பெயர் வைத்ததன் காரணம், இந்த பிரிவு, சண்டை, மோதல், ஏமாற்றம் என்ற நான்கிற்கும் தொடர்பு இருப்பதால் தான்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் வருவது
காதலில் வருவது
நட்பில் வருவது
குடும்பத்தில் வருவது
வேட்டிக்கை வருவது
என்று பல இடங்களில் இந்த நன்கு விடயங்களும் தொடர்பு படுகின்றன...........
காதல் விடயத்தில் பலர் எனக்கு எதிரியாக வரலாம் (காதலில் வருவது என்று சொல்லி இருந்தேனே, அதைச் சொன்னேன்..)
அது வேறு ஒன்றுமல்ல......... இங்கு நான் தோல்வி என்றது காதல் தோல்வியில் முடியும் என்பதால் அல்ல; காதலில் ஏற்படும் பல வேளைகளில் தோல்வியில் முடிவடைகின்றன (என் அனுபவம் அல்ல, பார்த்த உண்மை)
இதே போல தான் ஏமாற்றமும் கூட..................
மோதல் கீதல், சண்டை சச்சரவு எல்லாம் இங்க சகஜமப்பா...........

5 comments:

  1. விபு......ம்....கலக்கிடிங்க.....புரிகிறது.....

    ////இங்கு நான் தோல்வி என்றது காதல் தோல்வியில் முடியும் என்பதால் அல்ல; காதலில் ஏற்படும் பல வேளைகளில் தோல்வியில் முடிவடைகின்றன (என் அனுபவம் அல்ல, பார்த்த உண்மை)///
    காதல் ஏற்படும் பல வேளைகளிலா இல்லை காதலில் ஏற்படும் பல வேளைகளிலா புரியவில்லை...........

    பலருக்கு தனக்கு காதல் வருவது எப்ப எண்டே புரியவிலலையாம்...ஆனால் நீங்களோ பார்த்த அனுபவம் எண்டுறிங்க....எவளவு காலம் தான் இப்படி காலத்தை ஓட்டபோறிங்களோ ...லொல்...லொல்....

    ReplyDelete
  2. /// காதலில் ஏற்படும் பல வேளைகளில் தோல்வியில் முடிவடைகின்றன///

    புரியவில்லை இது ..காதை ஏற்படும் வேளையிலா ?

    அதுசரி

    பலருக்கு தனக்கு காதல் வருவது எப்ப எண்டே புரியவிலலையாம்...ஆனால் நீங்களோ பார்த்த அனுபவம் எண்டுறிங்க....எவளவு காலம் தான் இப்படி காலத்தை ஓட்டபோறிங்களோ ...லொல்...லொல்....

    நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. காதலில் பல வேளைகளில் இவை ஏற்படும் என்று தான் சொல்ல வந்தான்.
    நீங்கள் சொல்வது போலவும் வரலாம்.
    தவறைத் திருத்தியமைக்கு நன்றி..........

    ReplyDelete
  4. பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம்

    POOSARAM : DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

    http://poosaram.tk/

    ARE YOU A SRI LANKAN BLOGGER?
    Join Orchids
    Directory of Sri Lankan Bloggers, to attract more readers to your blog.
    http://www.orchidslk.co.nr/

    ReplyDelete
  5. Yeap. I'm Sri Lankan, But I don't know how to join this group..

    ReplyDelete